துப்பாக்கிகளை திருப்பி தருவதற்கான காலக்கெடுவை நீடித்த பாதுகாப்பு அமைச்சு

Sivaa Mayuri
in சட்டம் மற்றும் ஒழுங்குReport this article
அரசாங்கத்தில் நிறைவேற்றுப் பதவிகளை வகித்த நாடாளுமன்றின் முன்னாள் உறுப்பினர்கள், மாகாண சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் தமக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை டிசம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சு, குறித்த அதிகாரிகளுக்கு, இலங்கை பொலிஸ் மற்றும் இராணுவத்தினால் கணிசமான எண்ணிக்கையிலான துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் வழங்கப்பட்டுள்ளமை கண்றியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், தொடர்புடையவர்கள், இந்த துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை 2024 டிசம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அமைச்சு அறிவித்துள்ளது.
காலக்கெடு நீடிப்பு
முன்னதாக, இந்தக் காலக்கெடு 2024 நவம்பர் 21ஆம் திகதி வரையிலேயே வழங்கப்பட்டிருந்தது.
எனினும், தற்போது வெளிநாட்டில் உள்ள உரிமதாரர்கள் உட்பட பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் அந்த காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 50 நிமிடங்கள் முன்

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

பிரித்தானியாவில் அரங்கேறிய பயங்கரம்! வீட்டினுள் வைத்து சுட்டுக்கொலை..பெண் உட்பட இருவர் கைது News Lankasri

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam

ஹாட் உடையில் வந்த ராஷ்மிகா.. பார்த்ததும் ஓடிப்போன ஏ.ஆர்.ரஹ்மான்! நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் Cineulagam
