கொழும்பில் சுற்றிவளைக்கப்பட்ட பால் மா விற்பனை நிலையம்
புறக்கோட்டை பிரதேசத்தில் இயங்கி வந்த பால் மா விநியோக நிலையமொன்றை நுகர்வோர் அதிகார சபையினர் சுற்றிவளைத்துள்ளனர்.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் சோதனைகள் மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவினர் இன்று (22.12.2023) புறக்கோட்டையில் உள்ள மொத்த விற்பனை நிலையங்களில் விசேட சோதனையை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 825 கிலோகிராம் காலாவதியான பால் மா தொகை கண்டுபிடிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
விற்பனையாளருக்கு எதிராக வழக்குத்தாக்கல்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஐஸ்கிரீம் மற்றும் இனிப்பு விற்பனையாளர்களே காலாவதியான பால் மாவை எடுத்துச் செல்வது ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மொத்த விற்பனை நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை நுகர்வோர் அதிகாரசபை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
You may like this
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri