மட்டக்களப்பில் இடம்பெற்ற சர்வ சமய குழுக்களின் அனுபவ பரிமாற்று விஜயம்
கிழக்கு மாகாணத்தில் இனங்களுக்கிடையே சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் சர்வ சமய குழுக்களின் அனுபவ பரிமாற்று விஜயத்தின் ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பில் (Batticaloa) இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வானது, இலங்கை தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (30.05.2024) மட்டக்களப்பிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, பண்டாரவளையிலிருந்து (Bandarawela) பிரதேச செயலாளர் தலைமையில் சகல மதங்களையும் உள்ளடக்கியதான இன நல்லிணக்க குழுவினரும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழு ஒன்றும் மட்டக்களப்பிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
மேலும், மட்டக்களப்பு மாவட்ட கலாசார முறைப்படி விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு சமயத் தலைவர்களின் ஆசிர்வாதத்தின் பின் கலை கலாசார மற்றும் அனுபவ பரிமாற்று நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.
இதன்போது, உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் பின்னரும் கிழக்கு மாகாணத்தில் இன நல்லிணக்கத்துடன் மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே. முரளிதரன் (J.J. Muralidharan) குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, மட்டக்களப்பு - காத்தான்குடி, மண்முனைப் பற்று, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் உட்பட மாவட்டத்தின் சமய தலைவர்கள் சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









