மட்டக்களப்பு மாநகரசபை இலங்கைக்கு முன்னுதாரணமாக விளங்குவதாக முதல்வர் தெரிவிப்பு
மட்டக்களப்பு மாநகரசபை எந்தவித ஊழல்களும் அற்ற நிலையில் இலங்கைக்கு முன்னுதாரணமான ஒரு மாநகரசபையாக விளங்கியுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாரியளவிலான அபிவிருத்தி திட்டங்களையும் செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் 19ஆம் திகதியுடன் உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரங்கள் விசேட ஆணையாளர்களுக்கு வழங்கப்படும் என தேர்தல் திணைக்களம் அறிவித்திருந்த நிலையில் மாநகரசபையின் இறுதி நாளாக கருதி நேற்றைய தினம் (17.03.2023) மாநகரசபை முதல்வரினால் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடத்தப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு மாநகரசபை
இதில் வைத்து கருத்து தெரிவித்த போதே முதல்வர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாநகரசபையினை பொறுப்பேற்ற போது அதற்கு முன்பு ஆட்சி செய்தவர்கள் பாரியளவிலான சட்டத்திற்கு முரணான செயற்பாடுகளையும், ஊழல்களையும் செய்திருந்த காரணத்தினால் அவற்றினை சரிசெய்து முன்னேறவேண்டிய சூழல் இருந்து வந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறப்பான முறையில் இலங்கையின் முன்மாதிரியான
மாநகரசபையாக மட்டக்களப்பு மாநகரசபையை முன்னெடுத்துவந்த நிலையில் அதனை தடுப்பதற்காக பல்வேறு
பிரயத்தனங்களை இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் முன்னெடுத்துவதாகவும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 1 நாள் முன்

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri

மரணத்தில் முடிந்த உல்லாசம்... லண்டன் மாணவி தொடர்பில் வெளிநாட்டு கோடீஸ்வரரின் மகன் ஒப்புதல் News Lankasri

எதிர்நீச்சல் விசாலாட்சி அம்மாவா இது? பாவாடை தாவணியில் சொக்க வைக்கும் அழகி.. வைரலாகும் புகைப்படம் Manithan

உக்ரைனில் இறங்கிய பிரித்தானியாவின் சேலஞ்சர் 2 டாங்கிகள்! புடின் எச்சரிக்கையை மீறிய நடவடிக்கைகள் News Lankasri
