ரிஷாட் பதியுதீனின் கைதுக்கு எதிராக கிண்ணியா பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கிண்ணியா பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஏ.ஆர்.எம்.அஸ்மியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை சபையில் ஏகமானதாக ஏற்றுக்கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கிண்ணியா பிரதேச சபையின் மே மாதத்திற்கான 41 ஆவது மாதாந்த சபை அமர்வு இன்று கிண்ணியா பிரதேச சபையின் தவிசாளர் கே.எம்.நிஹார் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஏ.ஆர்.எம்.அஸ்மி பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையில்,
2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி அதிகாலை 3 மணிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிசாட் பதியுதீன் கைதானது இந்த நாட்டு முஸ்லிம்களை வேதனைபடுத்துகின்ற ஜனநாயக முறையில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கைதாகக் காணப்படுகின்றது.
மேலும் இந்த ஜனநாயக நாட்டில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைக் கைது செய்வதாக இருந்தால் சபாநாயகருக்குத் தெரியப்படுத்தி சபாநாயகர் நீதிமன்றத்திற்கு அறிவித்த பின்னரே கைது செய்யப்பட வேண்டும். இதற்கு மாறாக இந்த கைது இடம்பெற்று இருக்கின்றது.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் ஏற்கனவே ஒருமுறை கைது செய்து ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் அளித்து எவ்வித குற்றமும் அற்றவர் என விடுதலை செய்யப்பட்டவர் எமது தலைவரை மீண்டும் இந்த குண்டு தாக்குதலுடன் தொடர்புப்படுத்தி இடம்பெற்ற இந்த கைது ஒரு சிலரைத் திருப்திப்படுத்துவதற்கான கைதாகவே காணப்படுகின்றது.
இந்த நாட்டின் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் உணர்வுகளை மதித்து எவ்வித குற்றமும்
செய்யாத எமது கட்சியின் தலைவர் றிசாட் பதியுதீன் விடுதலை
செய்வதற்கான அனைத்து ஜனநாயக முறைகளையும், இந்த அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.




முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
