வணிக பிரிவில் முதல் இடத்தை பெற்றுள்ள மன்/புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை
கடந்த வருடம் இடம்பெற்ற க.பொ.த உயர் தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்ட நிலையில் 3A தர சித்தியை பெற்று மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லூரியை சேர்ந்த செபஸ்ரியாம் பிள்ளை மேரி ஜெனிஸ்ரா வணிக பிரிவில் மாவட்ட ரீதியில் முதலாம் நிலையை பெற்றுக் கொண்டுள்ளார்.
மேலும் விஞ்ஞான பிரிவை சேர்ந்த மாணவி செபமாலை டல்மேடா செரீன் 2A B தர சித்தியை பெற்று மாவட்ட ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்று கொண்டுள்ளார்.
அத்துடன் அதே பாடசாலையை சேர்ந்த மாணவி முருகவேல் துவாரகா 2A B தர சித்தியை பெற்று மாவட்ட ரீதியில் மூன்றாம் நிலையை பெற்றுள்ளார்.