அதிரடியாக கைது செய்யப்பட்ட இலங்கை அரச தொலைக்காட்சியின் முன்னாள் தலைவர்
இலங்கை அரச தொலைக்காட்சியின் (SLRC) முன்னாள் தலைவர் சரத் கொங்கஹகே அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருடன், முன்னாள் பணிப்பாளர் நாயகம் தேவப்பிரியா அபேசிங்கவும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு 14.32 மில்லியன் இழப்பு
இவ்விருவரும், இலங்கை அரச தொலைக்காட்சியின் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் தொகுதிக்கு வெளியே ஆறு ஊழியர்களை நியமித்துள்ளனர்.

அவர்களை முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் தனிப்பட்ட பணியாளர்களாக நியமித்து, அதற்கான ஊதியத்தை இலங்கை அரச தொலைக்காட்சியிடமிருந்து பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இலஞ்ச ஆணைக்குழுவின் தகவல்களின் படி, இந்த நடவடிக்கையால் அரசாங்கத்திற்கு ரூபா 14.32 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri