குற்றவாளிகளை தண்டிக்க அரசாங்கத்திற்கு திறன் இல்லை: சிறிநேசன் தெரிவிப்பு
இலங்கை அரசாங்கத்திற்கு குற்றவாளிகளுக்கு தண்டிக்கும் அளவு திறன் இல்லாததால் சர்வதேச விசாரணை ஒன்றாலேயே தீர்வு காண முடியும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் ( Gnanamuthu Srineshan) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் (Batticaloa) படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் (Iyyadurai Nadeshan) 20ஆவது ஆண்டு நினைவேந்தலையொட்டி நேற்று (31.05.2024) இடம்பெற்ற நிகழ்வில் கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
"சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் படுகொலை செய்யப்பட்டு 20 வருடங்கள் கழிந்திருக்கின்றன. அதற்கு உள்நாட்டுப் பொறிமுறை மூலமாக எந்தவொரு விசாரணையும் நடத்தப்படவில்லை.
அரசாங்கத்தின் ஆதரவு
மேலும், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவும் இல்லை. ஆனால், அந்தக் குற்றவாளிகளை அனேகமாக கண்டவர்கள் உள்ளார்கள்.
யோசப் பரராசசிங்கம், சந்திரநேரு, ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட போதும் குற்றவாளியை அடையாளம் கண்டிருக்கின்றார்கள். ஒரு குள்ளமான உருவம் அந்த குற்றவாளியாக இனம் காணப்பட்டிருக்கின்றது.
ஆனால், அவர்களை வெளிக்கொணர்வதற்கு மற்றவர்கள் பயம் கொள்கின்றார்கள். எனவே, அரசு குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டியிருக்கின்றது.
மேலும், இலங்கையில் உள்நாட்டுப் பொறிமுறையின் மூலமாக கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்குகோ, காணாமலாக்கப்பட்டவர்களுக்கோ, இனப்பிரச்சினைக்கோ, எந்தவொரு தீர்வும் காணப்படவில்லை. இந்த நாட்டில் உள்நாட்டுப் பொறிமுறை என்பது வெறும் பொய் வார்த்தையாக தான் இருக்கின்றது.
எனவே, இப் பிரச்சினைகளுக்கெல்லாம் சர்வதேச பொறிமுறைய ஊடாகத்தான் தீர்வு காணப்படல் வேண்டும். காணாமல் போனவர்களை மறந்து விடுங்கள் என கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) வெற்றி பெற்றதன் பின்னர் கருத்து தெரிவித்திருந்தார்.
உரிய தண்டனை
அதேபோல், காணாமல் போனவர்களை மண்ணைத் தோண்டிப் பாருங்கள் என விமல் வீரவம்சவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழர்களின் பிரச்சினை சோறும் தண்ணீரும் என மகிந்தானந்த தெரிவித்திருந்தார். எனவே, 75 வருடங்களாக அவர்கள் தமிழர்களின் பிரச்சினைகளை ஒரு அற்ப சொற்பமானவையாக தான் விளங்கி வைத்திருக்கிறார்கள்.
மேலும், இலங்கை அரசாங்கம் இவ்வாறான குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கக் கூடிய அளவிற்கு திறத்துடன் இல்லை என்று கூறலாம்.
எனவே, சர்வதேச விசாரணை ஒன்றே தான் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கும், அவர்கள் தண்டிக்கப்படுவதற்கும் ஒரே வழியாக இருக்கும்.
இந்த நாட்டில் சட்டம் இருவகையாக இருக்கின்றது. தமிழர்களுக்கு ஒருவகையாகவும், தென்னிலங்கையர்களுக்கு ஒரு வகையாகவும் இருக்கின்றது. எனவே, சட்டம் முறையாக கடைப்பிடிக்கப்படல் வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தங்க,வெள்ளி நூலால் நெய்யப்பட்ட புடவையை வாங்கிய நீதா அம்பானி - அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/ebaf1ae0-7c64-4543-8b01-3dd09e4c522b/24-667e69c5e68b2-sm.webp)
தங்க,வெள்ளி நூலால் நெய்யப்பட்ட புடவையை வாங்கிய நீதா அம்பானி - அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா? News Lankasri
![கைகால் செயலிழந்த நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிய வடிவேலு! எவ்வளவு கொடுத்திருக்கிறார் பாருங்க](https://cdn.ibcstack.com/article/90ad5568-c5b9-42f6-b20d-a6b3c96c5821/24-667ec069781b9-sm.webp)
கைகால் செயலிழந்த நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிய வடிவேலு! எவ்வளவு கொடுத்திருக்கிறார் பாருங்க Cineulagam
![இந்த 3 கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் யாரையும் திருமணம் செய்யாதீங்க.. நிராசையாக போய்விடும்- சாணக்கியரின் அறிவுரை](https://cdn.ibcstack.com/article/a2a716bb-b407-43a5-b593-cbf37213b67c/24-667e98289dbd1-sm.webp)
இந்த 3 கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் யாரையும் திருமணம் செய்யாதீங்க.. நிராசையாக போய்விடும்- சாணக்கியரின் அறிவுரை Manithan
![முக்கிய இடத்தில் ஆல்டைம் ரெக்கார்ட் வசூல் சாதனை செய்த பிரபாஸின் கல்கி 2898 ஏடி... எவ்வளவு தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/41735971-48bc-412f-93b9-a3e3d96c3205/24-667e37dd693f0-sm.webp)
முக்கிய இடத்தில் ஆல்டைம் ரெக்கார்ட் வசூல் சாதனை செய்த பிரபாஸின் கல்கி 2898 ஏடி... எவ்வளவு தெரியுமா? Cineulagam
![பல கோடிகளுக்கு சொந்தகாரியான த்ரிஷா.. வருண் மணியன் ஏமாந்தாரா? புட்டுபுட்டு வைக்கும் AL சூர்யா](https://cdn.ibcstack.com/article/e2c922b6-4439-475b-834d-fbef2a465e23/24-667e5ba59891d-sm.webp)
பல கோடிகளுக்கு சொந்தகாரியான த்ரிஷா.. வருண் மணியன் ஏமாந்தாரா? புட்டுபுட்டு வைக்கும் AL சூர்யா Manithan
![மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல சீரியல் நடிகை... அவரே பதிவிட்ட ஷாக்கிங் தகவல்](https://cdn.ibcstack.com/article/99a215cb-ab29-4654-862f-a4bdce3da22b/24-667e6e3f68db2-sm.webp)