நீதிமன்றில் முன்னிலையான பிள்ளையான்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்(Sivanesathurai Chandrakanthan) நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
இன்று(10) களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தில் இவர் முன்னிலையாகியுள்ளார்.
காணி சீர்திருத்த ஆணைக் குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜிற்கு அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவித்து பிள்ளையானுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைகளுக்காகவே அவர் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு இராஜாங்க அமைச்சராகவும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராகவும், பதவி வகித்த வேளையில் காணி சீர்திருத்த ஆணைக் குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் உடன் காணி தொடர்பாக தொலைபேசி மூலமாக ஏற்படுத்திக் கொண்ட உரையாடலின் போது அவருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
