போலி விசாக்களைத் தயாரித்ததற்காக முன்னாள் அரச அதிகாரி கைது
போலி ஆவணங்களைத் தயாரிக்கும் மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 70 வயது முதியவர் ஒருவர் நவகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதிய கடவுச்சீட்டு
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் முன்னாள் அலுவலக உதவியாளரான குறித்த சந்தேக நபரிடமிருந்து 48 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளும், பாதுகாப்பு முத்திரைகளைச் சரிபார்க்கப் பயன்படுத்தப்படும் ஒரு கருவியும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பழைய கடவுச்சீட்டுகளிலிருந்து அகற்றப்பட்ட விசாக்களை புதிய கடவுச்சீட்டுகளில் பொருத்தி, தூதரகங்களில் சமர்ப்பித்து பல்வேறு நாடுகளுக்கு மோசடியாக வீசா பெற்றுக் கொள்ள அவர் உடந்தையாக இருந்துள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணையின் பின்னர் சந்தேக நபர் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.