புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்பும் சிறையில் அடைக்கப்படும் முன்னாள் போராளிகள்!
புனர்வாழ்வளிக்கப்பட்டதன் பின்னரும் பல முன்னாள் போராளிகள் சிறையில் அடைக்கப்படுகின்றார்கள் என முன்னாள் போராளியான வைத்திலிங்கம் பாலசுரேஸ் (Vaiththilingam Balasuresh) குற்றம் சுமத்தியுள்ளார்.
புதுக்குடியிருப்பில் (Puthukkudiyiruppu) இன்றையதினம் (21.05.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"முன்னாள் போராளிகளாகிய நாங்கள் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றோம்.
அண்மையில் கூட முன்னாள் போராளியாகிய அரவிந்தன் பல மக்கள் சேவைகள் புரிந்து வந்த போதும் எந்தவொரு வழக்குகளும் பதிவு செய்யப்படாத நிலையில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரின், முகநூல் பதிவொன்று தொடர்பாகவே கைது செய்யப்பட்டதாக அறிந்தோம். ஆனால், நாங்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டதன் பின்னரே விடுதலை செய்யப்பட்டோம். மீண்டும் எங்களை துன்புறுத்தாதீர்கள்.
மேலும், அரவிந்தன் எனும் முன்னாள் போராளியை வழக்கு பதிவு செய்யாமலே வைத்திருக்கின்றீர்கள். அவர் குற்றம் இழைத்திருப்பின் வழக்கினை பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுத்து வழக்கினை துரிதப்படுத்துங்கள்” என சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri