வாட்ஸ்அப் காணொளி மூலம் சிக்கிய ஆதாரம்! பத்மேவுக்காக நடிகைகளின் மோசமான செயல்
கெஹல்பத்தர பத்மே கருப்பு பணத்தை வெள்ளையாக்க பிரபல நடிகைகளை பயன்படுத்தியமை குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த நடிகைகளுக்கு கெஹல்பத்தர பத்மே பெருந்தொகை பணம் கொடுத்தாரா என்பது குறித்து ஆராயப்பட்டு வருகின்றது.
கறுப்பு பணத்தை பல்வேறு முதலீடுகளில் குறித்த நடிகைகள் பயன்படுத்தியதாக வெளியான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், டுபாயில் கெஹல்பத்தர பத்மேவுடன் புகைப்படம் எடுத்த பியூமி ஹன்சமாலி மற்றும் ஸ்ரீமாலி பொன்சேகா உட்பட ஆறு பிரபல நடிகைகளில் ஐந்து பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வாக்குமூலம் அளிக்க குற்றப் புலான்ய்வு திணைக்களத்திற்கு வந்த நடிகை ஸ்ரீமாலி பொன்சேகா, தான் கெஹல்பத்தர பத்மே என்பதை அறியாமல் புகைப்படம் எடுத்ததாக குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு நாட்டில் இடம்பெற்ற பல முக்கியமான அரசியல், சமூக, பொருளாதார செய்திகளை உள்ளடக்கிய லங்காசிறியின் விசேட செய்தி தொகுப்பு இதோ....