நுவரெலியா மாவட்டத்தில் பணி பகிஷ்கரிப்புக்கு அனைவரும் ஒத்துழைப்பு! - வேலு யோகராஜா
பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு தொடர்பாக நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தைக்கு ஒரு அழுத்தம் கொடுப்பதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நாளை ஒரு நாள் பணி பகிஷ்கரிப்பை ஏற்பாடு செய்துள்ளதாக நுவரெலியா பிரதேசசபை தவிசாளர் வேலு யோகராஜா தெரிவித்துள்ளார்.
இந்த பணிபகிஷ்கரிப்புக்கு அனைத்து தோட்டத் தொழிலாளர்கள், மலையகத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்கள், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள நகர வர்த்தகர்கள், முச்சக்கரவண்டி சாரதிகள், ஆசிரிய தொழிற்சங்கங்கள், இளைஞர்கள், நுவரெலியா பிரதேச சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் உட்பட பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நுவரெலியா பிரதேசசபை காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் வைத்து அவர் குறித்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க முயன்ற பொழுதும், கடந்த பேச்சுவார்த்தையின் போது 200 ரூபாய் சம்பள உயர்வு மட்டுமே பெற முடிந்தது.
இன்று இ.தொ.கா வின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் இந்த ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றார்.
அதன் ஆரம்பக்கட்டமாக முதலாளிமார் சம்மேளனத்திற்கும், சம்பள நிர்ணய சபைக்கும், அரசாங்கத்திற்கும் ஒரு அழுத்தம் கொடுக்கும் முன்னோடி ஏற்பாடான நாளை அமைதியான ஒரு நாள் பணி பகிஷ்கரிப்பை நடத்த ஏற்பாடு செய்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு எவ்வித பேதமும் இன்றி அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாகக் கைகோர்க்க வேண்டும் என கோரியுள்ளார்.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 6 மணி நேரம் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
