மட்டுப்படுத்தல்களுடன் தளர்த்தப்பட்ட பயணக்கட்டுப்பாடு - இன்றிரவு மீண்டும் அமுல்! செய்திகளின் தொகுப்பு
நாடுபூராகவும் மூன்று நாட்களுக்கு அமுல்படுத்தப்பட்ட பயணக்கட்டுப்பாடு இன்று அதிகாலை நான்கு மணிமுதல் தளர்ப்பட்டுள்ளது.
பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் பணிபுரிபவர்கள் தவிர்ந்த ஏனையவர்கள் அடையாள அட்டை இலக்கத்தின் பிரகாரமே வெளியில் செல்ல முடியும் என பிரதி பொலிஸ் மா அதிபர், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஒற்றை திகதியில் அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தினை ஒற்றை இலக்கமாகக் கொண்டுள்ளவர்களும், இரட்டை திகதியில் அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தினை இரட்டை இலக்கமாகக் கொண்டுள்ளவர்களும் வெளியில் செல்ல முடியும். நாட்டின் பல பகுதிகளிலும் இன்று அடையாள அட்டைகளை பொலிஸார் பரிசோதித்தாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,