உக்ரைனில் இருந்து உடனடியாக வெளியேறுங்கள் - கனேடிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்
உக்ரைனில் உள்ள கனேடிய மக்கள் உடனடியாக நாடு திரும்புமாறு அவசர அறிவுறுத்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் எல்லைக்கு அருகில் ரஷ்ய துருப்புக்கள் குவிக்கப்பட்டுள்ளதால், உக்ரைனுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரஷ்யா எச்சந்தர்ப்பத்திலும் உக்ரைன் மீது ஆக்கிரமிப்பை நடத்தலாம் எனவும், பேச்சுவார்த்தைகள் தோல்வியடையும் எனில் ரஷ்யா ஆக்கிரமிக்கும் அபாயம் இருப்பதாகவும் அமெரிக்காவும் தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இருப்பினும், உக்ரைன் மீதான தாக்குதல் திட்டம் எதுவும் இல்லை எனவும், சூழலுக்கு ஏற்றவாறு முடிவெடுக்கப்படும் எனவும் ரஷ்யா அறிவுறுத்தியுள்ளது.
உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது 100,000 படைகளை குவித்துள்ளதுடன், உக்ரைன் மீது ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் படையெடுக்கலாம் என்ற பதட்டம் நிலவி வருகின்றது.
இதனிடையே, கனேடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி, உக்ரைன் பிரதமரை சந்திக்கும் பொருட்டும் கனடாவின் ஆதரவை தெரிவிக்கும் பொருட்டும் உக்ரைன் புறப்பட்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 19 மணி நேரம் முன்
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan
ட்ரம்பால் நியூயார்க்கின் மேயரைக் கூட நியமிக்க முடியாது: ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் பதிலடி News Lankasri
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri
இது மட்டும் நடந்தால் கதையே மாறிடும்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகர் கதை பற்ற போட்ட பதிவு வைரல் Cineulagam