பல்வேறு திட்டங்களுடன் இந்தியாவுக்கு பயணிக்கவுள்ள எலோன் மஸ்க்
பல பில்லியன் டொலர்கள் முதலீட்டு திட்டங்களுடன் டெஸ்லாவின் (Tesla) தலைமை நிர்வாக
அதிகாரியான எலோன் மஸ்க் (Elon Musk), இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு (India) பயணிக்கவுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியுடனான (Narendra Modi) சந்திப்பு மற்றும் முதலீட்டு நிகழ்ச்சிகளுக்காக அவர் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரு புதிய தொழிற்சாலையை நிறுவுதல் தொடர்பான அறிவிப்பு எலோன் மஸ்க் மற்றும் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையிலான சந்திப்பில் விவாதப் புள்ளியாக இருக்கும் என்று சர்வதேச ஊடகங்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலீட்டு உறுதிப்பாடுகள்
இந்நிலையில், பிரதமர் மோடி ஏப்ரல் கடைசி வாரத்தில் டெல்லியில் எலோன் மஸ்க்கை சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும், இந்தியாவிற்கான டெஸ்லாவின் திட்டங்கள், முதலீட்டு உறுதிப்பாடுகள் மற்றும் புதிய உற்பத்தி வசதிகளை தொடங்குதல் தொடர்பான விபரங்கள் உட்பட தனித்தனியான அறிவிப்புகளை வெளியிட மஸ்க் இந்த வாய்ப்பை பயன்படுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri