இலங்கை தொடர்பில் அமெரிக்கா எடுத்துள்ள முக்கிய தீர்மானம்
இலங்கையின் பாதுகாப்புக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சல்லிவன் உறுதியளித்துள்ளார்.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனுக்கும், இலங்கையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியுமான சாகல ரத்நாயக்கவுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதி அலுவலக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்திற்கான அமெரிக்காவின் ஆதரவு, சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கையின் வேலைத்திட்டத்தின் நிதி மற்றும் நிர்வாகத் தேவைகளை நிறைவு செய்தல் மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான எதிர்கால ஒத்துழைப்பு போன்ற இருதரப்பு விடயங்கள் குறித்து இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
பிராந்திய அமைதி
பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான தற்போதைய நடவடிக்கைகளுக்காக இலங்கையுடன் இணைந்து செயற்படுவதற்கும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இணங்கியுள்ளார்.

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
