எலோன் மஸ்க் எதிர்கொண்ட பேரிழப்பு..! ட்ரம்ப் பகையின் எதிரொலி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடனான மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், நேற்றையதினம்(06.06.2025) எலோன் மஸ்க்கின் சொத்து மதிப்பில் 27 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மஸ்க்கின் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய பெடரல் கடன்கள் மற்றும் மானியங்களை நிறுத்துவதாகவும் ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இதுவரை எலோன் மஸ்க்கிற்கு சொந்தமான நிறுவனங்கள், சுமார் 38 பில்லியன் டொலர் பெறுமதியான அரசாங்க ஒப்பந்தங்களை பெற்றுள்ளன.
ட்ரம்பின் கொள்கை முடிவு
அத்துடன், கடந்த ஆண்டில் மட்டும் அரசாங்கத்தின் நேரடி ஒப்பந்தங்களால், எலோன் மஸ்க், சுமார் 3.8 பில்லியன் டொலர்களை சம்பாதித்துள்ளார்.
இந்நிலையில், ட்ரம்ப் உடனான மோதல், மஸ்க்கின் இந்த ஒப்பந்தங்களை கேள்விக்குறியாக்கியுள்ளன.
ஜனாதிபதி ட்ரம்பின் கொள்கை முடிவு ஒன்றை எலோன் மஸ்க் கடுமையாக எதிர்ப்பதே இந்த மோதல் போக்கிற்கான காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கொள்கை முடிவால் அமெரிக்க அரசாங்கத்திற்கு ட்ரில்லியன் கணக்கான டொலர்கள் பற்றாக்குறை ஏற்படும் என்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவர் என்றும் மஸ்க் கருதுகின்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

ராஜநாகங்களின் ராஜ்யம்: இந்தியாவில் மனிதர்களை விட நாகங்கள் அதிகம் வாழும் நகரம் எது தெரியுமா? Manithan
