வவுனியா நகருக்குள் நுழைந்த யானை: உடமைகள் சேதம்
வவுனியா நகரப் பகுதிக்குள் இன்றையதினம் (12) யானை ஒன்று நுழைந்தமையால், உடமைகள் சில சேதமடைந்துள்ளதுடன் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
குறித்த யானை அதிகாலை தவசிக்குளம், மேட்டுத்தெரு, தோணிக்கல் வழியாக வவுனியா நகருக்குள் சென்றுள்ளது.
இந்தநிலையில், யானை தோணிக்கல் பகுதியில் வீடொன்றை சேதப்படுத்தியுள்ளதுடன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் துவம்சம் செய்துள்ளது.
மக்கள் அச்சம்
தோணிக்கல் வீதியால் வவுனியா நகரை அடைந்த குறித்த யானை சந்தை உள்வட்ட வீதி ஊடாகச் சென்று தினச்சந்தைக்கு பின் பகுதியால் வவுனியா குளத்தில் இறங்கியது.
இதன்போது சில கட்டடங்களின் மதில், சுவர்களையும் அது சேதப்படுத்தியுள்ளது.
வவுனியா குளத்தில் இறங்கிய யானை பல மணிநேரமாக வெளியே வர முடியாமல் தத்தளித்த வண்ணம் இருப்பதை அவதானிக்க முடிந்தது.
யானைகள் அட்டசாசம்
சம்பவம் தொடர்பாக வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தெரிவிக்கப்பட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள் யானையை பாதுகாப்பாக அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
குறித்த யானை வழிதவறி நகரப் பகுதிக்குள் வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






