தம்பலகாமம் பகுதியில் இறந்து கிடந்த கொம்பன் யானை
தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மெட்டியாவ வடக்கு ஈச்சங்குளம் காட்டுப் பகுதியை அண்டிய பகுதியில் யானை ஒன்று இறந்து கிடந்ததாக நேற்று மாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த யானை சுமார் 30 தொடக்கம் 35 வயது மதிக்கத்தக்க ஆண் கொம்பன் எனவும், எட்டு அடி உயரம் கொண்டது என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த யானையானது இரு வாரங்களுக்கு முன் பன்றிக்கு வைக்கும் சோள வெடியை உட்கொண்டு தொண்டையில் சிக்கியதன் காரணமாக உணவு சாப்பிட முடியாது இறந்திருக்கலாம் என வனஜீவராசிகள் அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
யானையின் உயிரிழப்பு சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வனஜீவராசி அதிகாரிகளுடன் இணைந்து தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.