யானையின் தாக்குதலுக்கு இலக்காகிய இளைஞரொருவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில்
திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யானையின் தாக்குதலுக்குள்ளான நிலையில் இளைஞரொருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ள நிலையில் மூதூர் - இறால்குழி பகுதியைச் சேர்ந்த நவரட்ணம் செந்தீபன் (28 வயது) என்பவரே யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த இளைஞர் வயலுக்குக் காவலுக்குச் சென்ற வேளையில் யானையை துரத்த முற்பட்டபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து அவர் காயமடைந்த நிலையில் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.