தொழிற்சங்க போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதாக இலங்கை மின்சாரசபை தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை
1996ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 72 மணித்தியால தொழிற்சங்க போராட்டம் போன்று எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி தொழிற்சங்கப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப்போவதாக இலங்கை மின்சாரசபை தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.
அரசாங்கம், கெரவலப்பிட்டிய மின்சார நிலையத்தை அமெரிக்க நிறுவனத்துக்கு கையளித்த உடன்படிக்கையை ஆட்சேபித்தே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் (Ranjan Jayalal) தொிவித்துள்ளார்.
எனினும் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் திகதி எதனையும் தீர்மானிக்கவில்லை.
தமது கோரிக்கைகைளை வலியுறுத்தி கையொப்பங்களை திரட்டும் செயற்பாடு இடம்பெறவுள்ளதாக ரஞ்சன் ஜெயலால் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் சனிக்கிழமையன்று மின்சாரசபை தொழிற்சங்கங்கள் கூடி 72 மணித்தியால தொழிற்சங்க போராட்டம் குறித்து முடிவெடுக்கவுள்ளதாகவும் அவர் தொிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri
