வெளிநாட்டில் இலங்கையர்களுக்கு மோசடி கடவுச்சீட்டுகளை வழங்கும் பெண் தலைமையிலான கும்பல்
மலேசிய கடவுச்சீட்டை பெற இலங்கை சேர்ந்த ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட தந்திரமான முயற்சியை, கோலாலம்பூர் குடிவரவு துறை முறியடித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று முன்தினத் காலை கோலாலம்பூர் குடிவரவு அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
அன்றையதினம் காலை 10.15 மணிக்கு நடந்த இந்த சம்பவத்தில், ஒரு இலங்கையர் தனது தாய் என கூறிய ஒரு மலேசிய பெண்ணுடன், 10 வயதிற்குட்பட்ட சிறுவனுக்காக கடவுச்சீட்டிற்கு முதன்முறையாக விண்ணப்பித்துள்ளார் என கோலாலம்பூர் குடிவரவு இயக்குநர் வான் முகமது சௌபி வான் யூசோப் தெரிவித்தார்.
மலேசிய கடவுச்சீட்டு
விண்ணப்பதாரரின் உடல் தோற்றம், அவருக்காக சமர்ப்பிக்கப்பட்ட பிறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்பட்ட வயதுடன் பொருந்தவில்லை என்பதை அதிகாரிகள் கவனித்ததையடுத்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
பயோமெட்ரிக் சரிபார்த்த போது, அடிப்படை மலாய் மொழி வழிமுறைகளையும் பின்பற்ற முடியாமல் இருந்தமையினால் மேலதிக விசாரணைக்கு வழிவகுந்ததாக கூறப்படுகிறது.
மேலும், இது ஒரு உள்ளூர் பெண் தலைமையிலான கும்பலின் அறிவுறுத்தலின் கீழ் திட்டமிட்ட முயற்சி எனவும், அந்த கும்பல் மலேசிய கடவுச்சீட்டை பெற இலங்கையர்களுக்கான குறுக்குவழி ஒன்றை வழங்கி வந்ததாகவும் வான் முகமது சௌபி தெரிவித்துள்ளார்.
குறித்த இலங்கையர், உள்ளூர் பெண்ணின் உயிரியல் குழந்தையின் பிறப்புச் சான்றிதழைப் பயன்படுத்தி, அந்தக் குழந்தையை தனது மகனாக காட்டி கடவுச்சீட்டு பெற முயன்றுள்ளார்.
உயிரியல் குழந்தை
கடவுச்சீட்டு சட்டம் 1966 இன் கீழ், மேலதிக விசாரணைக்காக இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல், கும்பல் பயன்படுத்தியதாக நம்பப்படும் பல ஆவணங்கள் மற்றும் கையடக்க தொலைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் சர்வதேச பயண ஆவணங்களை சட்டவிரோதமாகப் பெற முயற்சிக்கும் கும்பல்களின் வலையமைப்பை வெளிப்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மலேசிய குடிமகனாக தோற்றமளித்து கடவுச்சீட்டு பெற முயற்சிப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் என குறிப்பிடப்படுகின்றது.





வெளிநாடொன்றில் பிரபல இந்திய தம்பதி விபத்தில் பலி: பிள்ளைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி News Lankasri

கணவர் இறந்த பின்னரும் தாலியுடன் இருக்கும் பிரியங்கா- அவ்வளவு பிரியம்.. நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
