சூடுபிடிக்கும் தமிழக சட்டசபை தேர்தல் - பொலிஸாருக்கு பிறப்பிக்கப்பட்ட அவசர உத்தரவு
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு இடம்பெற்று வரும் நிலையில் தேர்தல் பணியில் உள்ள பொலிஸாருக்கு அவசர உத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தேர்தல் பணியில் உள்ள பொலிஸார் வாக்குச்சாவடிக்குள் நுழைய கூடாது என டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் அனுமதி இருந்தால் மட்டுமே உள்ளே செல்ல வேண்டும்.
தேர்தல் பணி
பொலிஸார் அனைவரும் வாக்குச்சாவடியின் வெளிக்கதவு அருகே நின்று தங்களது பணியை செய்ய வேண்டும்.
விதிமுறைகளை மிகவும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இதேவேளை தமிழக சட்டசபை தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் சட்டசபை தேர்தலில் பகல் 1 மணி நிலவரப்படி 54.58 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri