இலங்கையின் தேர்தல் முறையில் மாற்றம் செய்வது குறித்து கவனம்
இலங்கையில் தேர்தல் முறையில் மாற்றம் செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
விகிதாசார முறைமையை மாற்றி தொகுதிவாரி அடிப்படையில் தேர்தலை நடாத்துவதற்கு அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல் முறை
நாடாளுமன்றின் 225 உறுப்பினர்களில் 160 உறுப்பினர்கள் நேரடி தொகுதிவாரி முறையில் தெரிவு செய்யப்படும் வகையில் யோசனை முன்வைக்கப்பட உள்ளது.
ஏனைய 65 உறுப்பினர்கள் விகிதாசார, மாவட்ட அல்லது தேசிய ரீதியில் தெரிவு செய்யும் வகையில் யோசனை முன்வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சில காலங்களுக்கு முன்னதாக கட்சித் தலைவர்களிடம் தேர்தல் முறை குறித்து கருத்து கோரப்பட்டதாகவும், அமைச்சரவை உப குழுவொன்றும் இந்த முறையை பரிந்துரை செய்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போதைய தேர்தல் முறையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாகவும் இதனால் இந்த முறையை மாற்றியமைக்க வேண்டுமெனவும் யோசனை முன்வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan