“இலங்கையின் ஜனநாயகத்துக்கு விழுந்த மரண அடி”
உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைத்தமை ஜனநாயகத்துக்கு விழுந்த மரண அடியாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.
தோல்விக்கு அஞ்சியே உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது என்பதை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,
"எரிவாயு வரிசை, பால்மா வரிசை, விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்களுக்குப் பதிலடி கொடுப்பதற்கு மக்கள் தயாராகிவிட்டனர்.
மக்களின் அடி பயங்கரமாக இருக்கும் என்பதால்தான், தேர்தலுக்கு அஞ்சி உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசு ஒத்திவைத்துள்ளது.
இதனை அரசு ஏற்றுக்கொள்ள
வேண்டும். மாறாகப் போலித் தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பக்கூடாது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைத்தமை ஜனநாயகத்துக்கு விழுந்த மரண
அடியாகும்" என தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 17 மணி நேரம் முன்
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri