கிழக்கு மாகாண சமூக மக்களின் தேர்தல் விஞ்ஞாபனம் ஜனாதிபதியிடம் கையளிப்பு
கிழக்கு மாகாணத்தில் வாழும் அனைத்து சமூகப் பிரஜைகளை மையப்படுத்திய தேர்தல் விஞ்ஞாபனம் ஜனாதிபதியிடமும் ஏனைய சமகால அரசியல்வாதிகளிடமும் கையளிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தினுடைய “உள்ளடக்கிய ஆட்சிக்கான குடிமக்களின் குரல் மற்றும் முன்முயற்சி” திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த சிவில் சமூக மக்களின் அபிலாசைகள் அடங்கிய தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஆங்கில மற்றும் தமிழ் பிரதிகள் நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
பாசிக்குடா விடுதியில் வைத்து இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
விஞ்ஞாபனத்தின் பிரதிகள்
அதேவேளை அதன் பிரதிகள், அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா, வடமேல் மாகாண ஆளுநர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ், எஸ்.எம்.எம். முஸர்ரப், கோவிந்தன் கருணாகரரன் ஆகியோரிடமு கையளிக்கப்பட்டன.
கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.எல்.எம். புஹாரி முஹம்மத் தலைமையில் திட்ட முகாமையாளர் பேரம்பலம் றேணுகா சிவில் சமூக அமைப்புக்களின் செயற்பாட்டாளர்களான கே. ஆறுமுகம் அசோக்கா, சைமன் வாணி, சிவில் சமூக செயற்பாட்டாளரும் சமூக ஆய்வு ஊடகவியலாளருமான ஏ.எச்.ஏ. ஹஸைன் ஆகியோர் கிழக்கு சமூக மக்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தைக் கையளித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |











தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 1 மணி நேரம் முன்

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
