கிழக்கு மாகாண சமூக மக்களின் தேர்தல் விஞ்ஞாபனம் ஜனாதிபதியிடம் கையளிப்பு
கிழக்கு மாகாணத்தில் வாழும் அனைத்து சமூகப் பிரஜைகளை மையப்படுத்திய தேர்தல் விஞ்ஞாபனம் ஜனாதிபதியிடமும் ஏனைய சமகால அரசியல்வாதிகளிடமும் கையளிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தினுடைய “உள்ளடக்கிய ஆட்சிக்கான குடிமக்களின் குரல் மற்றும் முன்முயற்சி” திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த சிவில் சமூக மக்களின் அபிலாசைகள் அடங்கிய தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஆங்கில மற்றும் தமிழ் பிரதிகள் நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
பாசிக்குடா விடுதியில் வைத்து இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
விஞ்ஞாபனத்தின் பிரதிகள்
அதேவேளை அதன் பிரதிகள், அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா, வடமேல் மாகாண ஆளுநர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ், எஸ்.எம்.எம். முஸர்ரப், கோவிந்தன் கருணாகரரன் ஆகியோரிடமு கையளிக்கப்பட்டன.
கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.எல்.எம். புஹாரி முஹம்மத் தலைமையில் திட்ட முகாமையாளர் பேரம்பலம் றேணுகா சிவில் சமூக அமைப்புக்களின் செயற்பாட்டாளர்களான கே. ஆறுமுகம் அசோக்கா, சைமன் வாணி, சிவில் சமூக செயற்பாட்டாளரும் சமூக ஆய்வு ஊடகவியலாளருமான ஏ.எச்.ஏ. ஹஸைன் ஆகியோர் கிழக்கு சமூக மக்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தைக் கையளித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |











அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 3 மணி நேரம் முன்

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri
