யாழில் தவறான முடிவெடுத்து முதியவர் உயிர்மாய்ப்பு
யாழில் மனவிரக்தியடைந்த முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்றையதினம்(21) உயிர்மாய்த்துள்ளார்.
மாவை கலட்டி, கொல்லங்கலட்டி பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை கதிர்வேல் (வயது 74) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் தனது மகனுடன் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் இன்று நண்பகல் வீட்டுக்கு அருகேயுள்ள வேப்பமரத்தில் உயிர்மாய்த்துக்கொண்டுள்ளார்.
அவரது சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
காங்கேசன்துறை பொலிஸார் சாட்சிகளை நெறிப்படுத்தினர். விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri
