கேரளாவில் நடைபெறவுள்ள இந்தியா - இலங்கை கிரிக்கெட் போட்டிகளுக்கு விரிவான பாதுகாப்பு
கேரளா - கிரீன்ஃபீல்ட் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தியா, இலங்கை கிரிக்கெட் போட்டிகளுக்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நகர பொலிஸார் நேற்று (13.01.2023) தெரிவித்துள்ளனர்.
இந்த போட்டிகள் நாளை (15.01.2023) நடைபெறவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த கிரிக்கெட் போட்டிகளுக்கான பாதுகாப்பு பணிகளை முன்னெடுக்க 800 பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் அறிவுறுத்தல்
இதன்போது நாளை (15.01.2023) 10.30 மணி முதல் பார்வையாளர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அவர்கள் மைதானத்துக்கான அனுமதியுடன், அடையாள அட்டைகளையும் சமர்ப்பிக்க வேண்டும் என் கோரப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.