சுவிஸ் நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழர்கள் இணையவழி மூல கராத்தே சுற்றுப்போட்டியில் சாதனை
ஜப்பான் நாட்டில் இடம்பெற்ற முதலாவது இதோசு ரியூ இணையவழி மூல கராத்தே சுற்றுப்போட்டியில் கலந்து கொண்ட சுவிஸ் நாட்டில் வசிக்கும் தமிழர்கள் சாதனை படைத்துள்ளனர்.
18 நாடுகளில் இருந்து சுமார் 400 போட்டியாளர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.
ஈழத்தமிழர் சார்பில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த சர்வதேச போட்டியில் பங்குபற்றிய மாணவர்களில் 10 போட்டியாளர்கள் வெற்றியீட்டியுள்ளனர்.
அந்தவகையில் அவர்கள் 2 தங்கப்பதக்கமும், 6 வெள்ளிப்பதக்கங்களும், 2 வெண்கல பதக்கங்களும் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஜப்பான் நாட்டில் இருந்தே முடிவுகளை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய ஈழத்தமிழர்களுக்கு வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளதாக சுவிஸ் நாட்டிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.