கிண்ணியாவில் கல்வி நடவடிக்கைக்கான உதவி வழங்கும் நிகழ்வு
கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கல்விகான உதவி வழங்கல் நிகழ்வும் மருத்துவ போக்குவரத்து கொடுப்பனவு வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.
கிண்ணியா பிரதேச செயலாளர் எம். எச். முகம்மது கனி தலைமையில் நேற்றையதினம்(29)கிண்ணியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கல்விக்கான உதவித் தொகை
மத்திய சமூக சேவை திணைக்களத்தினால் மாற்றுத்திறனாளி நபர்களைக் கொண்ட குடும்பத்தின் கல்விக்கான உதவித் தொகை மற்றும் மருத்துவத்திற்கான போக்குவரத்துக் கொடுப்பனவு என்பன வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், கிண்ணியா பிரதேச செயலகத்தின் கணக்காளர், பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் வெளிக்கள பிரிவுக்கான பிரதம முகாமைதுவ உத்தியோகத்தர், சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தா் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.







ஜேவிபி மீண்டும் தன்னை அம்பலப்படுத்தி விட்டது 9 மணி நேரம் முன்

டிஆர்பி முதல் இடத்தை பிடித்த ஹிட் சீரியல், கீழ் இறங்கிய சிங்கப்பெண்ணே.. டாப் 5 சீரியல்களின் விவரம் Cineulagam
