ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்படும் எதிர்க்கட்சிகள் - ரில்வின் சில்வா
எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்பட முயற்சிப்பதாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை கூடிய விரைவில் நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு இணங்கியதாகத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(19) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சிலர் தேர்தல்களை ஒத்தி வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிடமும் பேசியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவின் அதிகாரம்
இவ்வாறான நடவடிக்கைகள் ஜனநாயகத்திற்கு எதிரானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களினால் நிராகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பல்வேறு காரணங்களைக் காட்டி தேர்தலை ஒத்தி வைக்க முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை கூடிய விரைவில் நடாத்துவது குறித்து தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் தேர்தல் ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றின் தீர்ப்பு மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரம் என்பனவற்றின் அடிப்படையில் தேர்தல்கள் கூடிய விரைவில் நடத்தப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 12 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri