கிழக்கு மாகாணத்தில் கோவிட் தடுப்பூசி திட்டம் முன்னெடுப்பு
கிழக்கு மாகாணத்தில் பொது மக்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்துவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி திருகோணமலை சுகாதாரப் பிராந்தியத்தில் 12 பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 230 கிராம சேவகர் பிரிவுகள் காணப்படுகின்றன.
இவற்றில் மூன்றாவது கோவிட் அலையினால் பாதிக்கப்பட்டு ஆபத்தான வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள 153 கிராம சேவகர் பிரிவுகளுக்கும் தடுப்பூசி செலுத்த முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
அதன்படி கிண்ணியா, குறிஞ்சாக்கேணி, திருகோணமலை, மூதூர் மற்றும் உப்புவெளி ஆகிய சுகாதாரப் பிரிவுகளுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்தப் பிரிவில் 30 தொடக்கம் 60 வயதுக்குட்பட்ட 29486 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட உள்ளதாகவம், இதற்காக 229 தடுப்பூசி நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam
