விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ள மைத்திரி உள்ளிட்டோருக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பலருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 12 அடிப்படை உரிமை மனுக்கள் எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி மீண்டும் உயர் நீதிமன்றத்தின் முழு அமர்வு முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
கோரிக்கை
இந்த அடிப்படை உரிமை மனுக்களுக்கு பல தரப்பினரும் முன்வைத்த கோரிக்கைகளை பரிசீலித்த உயர் நீதிமன்றம், இந்த மனுக்களை விசாரிக்க பட்டியலிட்டுள்ளது.

இந்த நிலையில் 2023ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் திகதியன்று, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக மீதமுள்ள 85 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு மேலும் கால அவகாசத்தை கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri