வீதியெங்கும் மரண ஓலம்! பலியெடுக்கப்பட்ட உயிர்களுக்கு நீதியின்றி தொடரும் ஆறாவது வருடம்..

Sri Lanka Bomb Blast 2019 Sri Lanka Easter bombings Easter Easter Attack Sri Lanka Bomb Blast
By Shadhu Shanker Apr 21, 2025 06:32 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

ஏப்ரல் 21, 2019..   அன்றும் ஒரு சாதாரண நாளாகத்தான் இலங்கையர்களுக்கு விடிந்தது. 

நேரம் செல்ல செல்ல சரியாக 08.45 மணிக்குப் பிறகு வீதியெங்கும் மரண ஓலம். ரத்தமும் சதையும் கதறல் சத்தமும் என்று வரலாற்றில் ஒரு நாளும் மறக்கவே முடியாத ஒரு கறுப்பு தினமாக அன்றைய நாள் மாறிப்போயிற்று.

அன்று, ஈஸ்டர் ஞாயிறு தினக் கொண்டாட்டத்தின் போது திருப்பலிகள் நடைபெற்ற தேவாலயங்களையும், ஆடம்பர விடுதிகளையும் குறிவைத்து நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதல்களில், 260இற்கும் மேற்பட்ட அப்பாவி உயிர்கள் பலியெடுக்கப்பட்டன. 500இற்கும் அதிகமானோர் காயமடைந்து மாறா வடுவை சுமந்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர். 

நிசப்தங்களை உடைத்து அலறிய தொலைபேசியில் அதிர்ச்சித் தகவல்! அன்று உயிர் இருந்தும் உறைந்து போன நாம் (Video)

நிசப்தங்களை உடைத்து அலறிய தொலைபேசியில் அதிர்ச்சித் தகவல்! அன்று உயிர் இருந்தும் உறைந்து போன நாம் (Video)

கொழும்பை உலுக்கிய கோர தாக்குதல் - உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்திய சோகம்

கொழும்பை உலுக்கிய கோர தாக்குதல் - உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்திய சோகம்

மாறாத வடு..

கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் நிகழ்ந்த இந்தக் கொடூரத் தாக்குதல்கள், இலங்கையர்களின் இதயத்தில் ஆறாத ரணத்தினை ஏற்படுடுத்தியுள்ளன. இன்றுடன், ஆறு ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட அந்த வலி இன்றுமே புதியதாய் இருக்கிறது. 

தேவாலயங்கள், ஹோட்டல்கள் என பாதுகாப்பாக இருக்க வேண்டிய இடங்களே உயிரிழப்பு மையங்களாக மாறின.

வீதியெங்கும் மரண ஓலம்! பலியெடுக்கப்பட்ட உயிர்களுக்கு நீதியின்றி தொடரும் ஆறாவது வருடம்.. | Easter Attack Sri Lanka 6Th Year Memorial Day

அந்தக் காலை, கிறிஸ்தவக் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் கொண்டாடச் சென்றனர். ஆனால் அவர்களில் பலர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவர்கள் ஒரு கொலையுண்டோர் பட்டியலில்  பெயராக மாறிவிட்டார்கள்.

இலங்கை மட்டுமல்ல, முழு உலகமே இதனால் அதிர்ந்தது எனலாம்.

பொதுவாகவே ஒரு பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் இருக்கும் வெறுப்பு, தீவிரம், மதச் சிக்கல்கள் என்பவை, மனித நேயத்தின் எதிர்மாறான உருவங்களாகதான் பார்க்கப்படுகின்றன.

வீதியெங்கும் மரண ஓலம்! பலியெடுக்கப்பட்ட உயிர்களுக்கு நீதியின்றி தொடரும் ஆறாவது வருடம்.. | Easter Attack Sri Lanka 6Th Year Memorial Day

ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல், இலங்கை மக்களுக்கு உண்மையில் ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது எனலாம்.

இது மாதிரியான தாக்குதல்களில் எல்லாம், பாதிப்படைவது பொதுமக்கள்தான். ஒரு தீவிரவாத குழுவின் செயலால், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து சோகம், குழப்பம், கோபம் ஆகிய உணர்வுகளோடு வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

6 ஆண்டுகள் ஆனாலும், பல கேள்விகளுக்கு பதில் இல்லை. யார் உண்மையான சூத்திரதாரர்கள்? இந்த தாக்குதலைத் தடுக்க முடியாமலிருந்தது ஏன்? அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்று பல்வேறு கேள்விகள் இங்கு காணப்படுகின்றன. 

வீதியெங்கும் மரண ஓலம்! பலியெடுக்கப்பட்ட உயிர்களுக்கு நீதியின்றி தொடரும் ஆறாவது வருடம்.. | Easter Attack Sri Lanka 6Th Year Memorial Day

ஆறு ஆண்டுகளாக, விசாரணைகள் நடந்தன. ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன. வாக்குமூலங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் உண்மை வெளியே வரவே இல்லையா என்ற சந்தேகம் வலுக்கின்றது.. 

நியாயம் என்பது நேரத்துடன் சேர்ந்து நகர வேண்டிய ஒன்று. ஆனால் இங்கே அது காத்திருக்கும் பயணமாகவே இருக்கிறது.

இது போன்ற பேரழிவுகளுக்குப் பிறகு, வாழ்க்கை எளிதில் சீராக மாற முடியாது. இருந்தாலும், அந்த குடும்பங்கள் இன்னும் நிமிர்ந்தே நிற்க முயற்சி செய்கிறார்கள்.

வீதியெங்கும் மரண ஓலம்! பலியெடுக்கப்பட்ட உயிர்களுக்கு நீதியின்றி தொடரும் ஆறாவது வருடம்.. | Easter Attack Sri Lanka 6Th Year Memorial Day

நினைவுகள், நம்பிக்கைகள், நிம்மதிக்கான நடைபாதை இப்படி நகர்கிறது அவர்களது வாழ்க்கை.  ஒரு நாடு உண்மையில் வளம் பெற வேண்டுமென்றால், அது பாதுகாப்பிலும், பொது நலத்திலும் முன்னேற வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற  சம்பவங்கள் மீண்டும் நடக்கவே கூடாது. 2019 ஈஸ்டர் தாக்குதல்களை, தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (NTJ) என்ற உள்ளூர் தீவிரவாதக் குழு,(ISIS) அமைப்புடன் சேர்ந்து நடத்தியதாக கூறப்படுகின்றது.

ஆனால், தாக்குதலுக்கு முன்பே இலங்கை உளவுத்துறைக்கு எச்சரிக்கைகள் கிடைத்திருந்தன என்பது பின்னர் வெளிப்பட்டது.

இலங்கை நாடாளுமன்றத் தேர்வு விசாரணைக் குழுவின் அறிக்கை, இந்தத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதை வெளிப்படுத்தியுள்ளது.

வீதியெங்கும் மரண ஓலம்! பலியெடுக்கப்பட்ட உயிர்களுக்கு நீதியின்றி தொடரும் ஆறாவது வருடம்.. | Easter Attack Sri Lanka 6Th Year Memorial Day

அந்த தாக்குதல் ஒரு மதத்தின் பெயரில் செய்யப்பட்டது. ஆனால் அது மதம் அல்ல,  இது ஒரு வன்செயல். மனிதனை மனிதனாக பார்க்கும் பார்வையை அழிக்க நினைத்த ஒரு முயற்சி.

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகும், நீதி இன்னும் வழங்கப்படவில்லை என்றாலும், இந்த நினைவு நாள் ஒரு புதிய உணர்வைத் தூண்டுகின்றது.

இன்று, அந்த தினத்தின் 6வது நினைவுநாளில், நாம் வெறும் சோகத்தையும் கண்ணீரையும் மட்டும் நினைவுகூராமல், மாற்றத்திற்கான வரலாறு படைக்க வேண்டும்.

வீதியெங்கும் மரண ஓலம்! பலியெடுக்கப்பட்ட உயிர்களுக்கு நீதியின்றி தொடரும் ஆறாவது வருடம்.. | Easter Attack Sri Lanka 6Th Year Memorial Day

நினைவில் வாழும் நம் உறவுகள் அந்த நாள் உயிரிழந்தவர்கள் நம்மில் சிலரின் தந்தை, தாய், மகன், மகள், நண்பர், ஆசிரியர், மாணவர்கள் மறைந்திருக்கலாம், ஆனால் அவர்களின் நினைவுகள் இன்றும் உயிரோடு இருக்கின்றன.

அவர்கள் நினைவாக, நாம் இனிமேல் எந்தவிதமான வெறுக்கும் கருத்துகளுக்கும் இடம் கொடுக்காமல், நம் நாட்டை ஒற்றுமையால் வளப்படுத்துவோம். அந்த நினைவு தினம், ஒரு துயர நாளாக மட்டுமல்ல, ஒரு மாற்றத்துக்கான ஒளியாகவும் மாறட்டும்! 

பிள்ளையான் தொடர்பில் கத்தோலிக்க திருச்சபை வெளியிட்டுள்ள பரபரப்புத் தகவல்

பிள்ளையான் தொடர்பில் கத்தோலிக்க திருச்சபை வெளியிட்டுள்ள பரபரப்புத் தகவல்

மைத்திரி மீது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டு! ரணில் விடுதலை செய்யப்பட்ட பின்னணி

மைத்திரி மீது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டு! ரணில் விடுதலை செய்யப்பட்ட பின்னணி

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Shadhu Shanker அவரால் எழுதப்பட்டு, 21 April, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு கொச்சிக்கடை

17 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
மரண அறிவித்தல்

குருநகர், Scarborough, Canada

05 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொழும்பு

05 Jun, 2020
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
மரண அறிவித்தல்

மருதனார்மடம், கொழும்பு, கொழும்பு கல்கிஸ்ஸை, Jaffna

06 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Montreal, Canada

05 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா, Canada

07 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வதிரி, அம்பாந்தோட்டை, Oslo, Norway, London, United Kingdom, Sutton, United Kingdom

31 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Urtenen-Schönbühl, Switzerland, பேர்ண், Switzerland

08 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

06 Jun, 2025
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, மட்டுவில், கிளிநொச்சி, Scarborough, Canada

19 Jun, 2024
மரண அறிவித்தல்

கரம்பன், வெள்ளவத்தை

04 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கிளிநொச்சி

02 Jun, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

07 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, மாமடுசந்தி, வவுனியா, Mississauga, Canada

01 Jun, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கந்தர்மடம்

08 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, தெஹிவளை

04 Jun, 2024
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, London, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, நீர்வேலி, Toronto, Canada

31 May, 2025
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
மரண அறிவித்தல்

Atchuvely, கொழும்பு, Mississauga, Canada

27 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US