ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான முக்கிய ஆதாரங்களை வெளியிட தயாராகும் முன்னாள் எம்.பி! அரசாங்கத்திற்குள் இருந்து கசிந்த தகவல்

Sri Lanka Bomb Blast 2019 Sri Lanka Easter bombings Uthaya Gammanpila Vijitha Herath Sri Lanka Government
By Benat Oct 16, 2024 12:25 PM GMT
Report

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான அறிக்கைகளில் இருந்து காணாமல் போனதாக கூறப்படும் பக்கங்களை அரசாங்கம் வெளியிடவில்லை என்றால் நான் நிச்சயமாக அவற்றை எதிர்வரும் திங்கட் கிழமை வெளியிடுவேன் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான செனல் 4 அறிக்கை மற்றும் குறித்த தாக்குதல் தொடர்பில் புலனாய்வு அமைப்புகள் செயற்பட்ட விதம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளின் பக்கங்கள் காணாமல் போனமை தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என அரசாங்கம் அண்மையில் அறிவித்தது.

கைது பட்டியல் நீளலாம்..! வர்த்தகர்களுக்கு அநுர அரசாங்கத்தின் எச்சரிக்கை

கைது பட்டியல் நீளலாம்..! வர்த்தகர்களுக்கு அநுர அரசாங்கத்தின் எச்சரிக்கை

ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து கசிந்த தகவல்கள் 

எனினும், அந்த அறிக்கைகளின் பக்கங்கள் காணாமல் போகவில்லை எனவும் அரசாங்கத்திடமுள்ள அந்த அறிக்கைகளை 7 நாட்களுக்குள் வெளியிடாவிட்டால் தாம் அவற்றைப் பகிரங்கப்படுத்துவதாகவும் உதய கம்மன்பில குறிப்பிட்டிருந்தார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான முக்கிய ஆதாரங்களை வெளியிட தயாராகும் முன்னாள் எம்.பி! அரசாங்கத்திற்குள் இருந்து கசிந்த தகவல் | Easter Attack Sri Lanka 2019

இதனையடுத்து, உதய கம்மன்பிலவிடம் அவ்வாறான அறிக்கைகள் இருப்பின் அதனை 3 நாட்களுக்குள் வெளியிடுமாறும் அமைச்சர் விஜித ஹேரத் நேற்று சவால் விடுத்திருந்தார்.

அமைச்சர் விடுத்திருந்த சவாலுக்கு பதிலளிக்கும் வகையில் இன்றைய ஊடக சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த உதய கம்மன்பில,

குறித்த அறிக்கைகளை வெளியிடுவதாக உறுதியளித்துள்ளமையால் தாம் அதனை ஒருபோதும் அரசாங்கத்திடம் கையளிக்கப் போவதில்லை.

அதேநேரம் அரசாங்கம் அந்த அறிக்கைகளை 7 நாட்களில் வெளியிடாத பட்சத்தில் நான் அதனை வெளியிடுவேன்.

குறித்த அறிக்கைகளின் பின் இணைப்புகளில் தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கிய விடயங்கள் காணப்படுகின்றமையினால் விசாரணைக் குழுவின் பரிந்துரைக்கமைய அவற்றை வெளியிடமாட்டேன்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான முக்கிய ஆதாரங்களை வெளியிட தயாராகும் முன்னாள் எம்.பி! அரசாங்கத்திற்குள் இருந்து கசிந்த தகவல் | Easter Attack Sri Lanka 2019

எனவே, ஜனாதிபதி காரியாலயத்திலிருந்து இவ்வாறான தகவல்களை வெளியிடுபவர்கள் தொடர்பில் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும். அரச இரகசிய சட்ட ஏற்பாடுகளுக்கமையவோ அல்லது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழோ என்னைக் கைது செய்வதற்கான இயலுமைகள் குறித்தும் நேற்றிரவு அரசாங்கத்தின் உயர் மட்டத்தினர் கலந்துரையாடியுள்ளனர்.

குறித்த விசாரணை அறிக்கையை வெளியிடாமல் வைத்திருப்பது பாரிய குற்றம் என அமைச்சர் விஜித ஹேரத் கூறினார். இந்த அறிக்கைகள் கடந்த 10 ஆம் திகதியே எனக்குக் கிடைக்கப்பெற்றன. அந்த அறிக்கைகள் கிடைத்து 4 நாட்களுக்குள் அது குறித்து நான் அறிவித்தேன்.

எந்த அச்சுறுத்தல் வந்தாலும், மக்களுக்கு உண்மையை அறிவிப்பதிலிருந்து நான் பின்வாங்கப் போவதில்லை. எனவே, அரசாங்கம் குறித்த அறிக்கைகளை வெளியிடாவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை நிச்சயமாக அதனைத் நான் பகிரங்கப்படுத்துவேன்.

3.5 பில்லியன் ரூபா வற் வரி மோசடி! அர்ஜூன் அலோசியஸின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம்

3.5 பில்லியன் ரூபா வற் வரி மோசடி! அர்ஜூன் அலோசியஸின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம்

ஓய்வூதியர்களின் வங்கிக் கணக்கில் இன்று முதல் வைப்பிலிடப்படவுள்ள பணம்

ஓய்வூதியர்களின் வங்கிக் கணக்கில் இன்று முதல் வைப்பிலிடப்படவுள்ள பணம்

2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம் கிழக்கு

08 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US