தௌஹீத் ஜமாத் அமைப்புக்கு உணவளித்த இலங்கை இராணுவ புலனாய்வாளர்கள்! பதிலில்லாத நான்கு கேள்விகள்
இலங்கையில் தீர்க்கப்படாத நான்கு கேள்விகள் எஞ்சியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்த பல விசாரணை ஆணைக்குழுக்கள் இருந்த போதிலும் இவ்வாறு 4 கேள்விகள் எஞ்சியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதி கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை
தௌஹீத் ஜமாத் அமைப்புக்கு இலங்கை இராணுவ புலனாய்வுப் பிரிவினர் உணவளித்தனர் என்ற குற்றச்சாட்டுகளுக்கு இன்னும் பதில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த அமைப்பு ஏன் கோட்டாபய ராஜபக்சவின் தேர்தலை அங்கீகரித்தது எனவும் பாட்டலி சம்பிக்க ரணவக்க கேள்வி எழுப்பினார்.
மேலும், இந்த தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.