உயிரிழந்த சஹ்ரான் தொடர்பில் மீண்டும் வெளிவரும் பல அதிர்ச்சி தகவல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் விசாரணைகள் இன்றளவும் தொடரும் நிலையில் காத்தான்குடியில் இன்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பும், அதிரடி கைதும் இலங்கை மக்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இந்த சுற்றிவளைப்பானது காத்தான்குடியில் ஒரு அச்சத்தை தோற்றுவித்துள்ளமையை அறியமுடிகிறது.
காரணம், குறித்த நடவடிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கைதாகி விடுதலையான பிரதான சூத்திரதாரி எனப்படும் சஹ்ரான் ஹாசிமின் சகோதரியின் கணவர் மற்றும் காத்தான்குடியில் 2017.03.10 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்த சஹ்ரான் பிரிவினைச் சேர்ந்த 3பேர் இதில் உள்ளடங்குவதே.
சிறப்பு சோதனை
இவ்வாறு கைது செய்யப்பட்ட அனைவரும் தீவிரவாத விசாரணைப் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், கைதுசெய்யயப்பட்ட சந்தேகநபர்களின் வீடுகள் மற்றும் கைது செய்யப்பட்ட இடம் என்பன சிறப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு விசேட அதிரடிப்படையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இம்மாத இறுதியில்(31.03.2024) உயிர்த்த ஞாயிறு பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், மட்டக்களப்பில் பெரும் அச்சநிலையை தோற்றுவித்துள்ளது இந்த கைது நடவடிக்கை.
இவ்வாறான ஒரு பின்னணியில் கடந்த 25ஆம் திகதி ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பில் அமெரிக்காவின் முகாமைத்துவம் மற்றும் வளங்கள் பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சட் வெர்மாவின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஒரு வலியுறுத்தலை விடுத்திருந்தார்.
பொருளாதார நெருக்கடி உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் நல்லிணக்கம் போன்றவழமையான விவகாரங்களுக்கு அப்பால் 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணகள் குறித்து அமைந்திருந்தது வெர்மாவின் கருத்துக்கள்.
வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரியுடனான சந்திப்பின்போதும் பின்னர் ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது ரிச்சட் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் விசாரணைகள் குறித்து வெர்மா ஆராய்ந்துள்ளார் என தகவல்கள் வெளியாகி இருந்தன.
அமெரிக்காவின் உதவி
2019 உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் தனக்கு தெரிந்த ஒருவரை வெர்மா இழந்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்க விடயம்.
குறித்த விசாரணைகளுக்காக அமெரிக்காவின் உதவியை நாடியதாகவும் தனது தரப்பிலிருந்து விசாரணைகள் முடிவடைந்து விட்டன என அமெரிக்கா அறிவித்துள்ளதாகவும் இலங்கை அரசின் கருத்து இதன்போது வெளிப்பட்டது.
இவ்வாறான பின்னணிகளை மத்தியில் காத்தான்குடி கைது விவகாரம் அமெரிக்க புலனாய்வுகளின் முடிவில் இடம்பெற்றதா என்ற சந்தேகத்தையும் தோற்றுவிக்கிறது.
எனினும் இந்த கைது நடவடிக்கையின் பின்னர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவின் தரப்பைச்சேர்ந்த ஒருவர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக காத்தான்குடியில் இருந்து நிலைமைகளை எடுத்துரைத்த ஒருவரின் கருத்து அமைந்திருந்தது.
இந்த களத்தில் ஹிஸ்புல்லாவின் தலையீட்டிற்கு காரணம் என்ன என்ற கேள்வியும் தோற்றம் பெறுகிறது.
சம்பவத்தில் கைதான 30 சந்தேகநபர்களும் சஹ்ரானின் அடிப்படைவாத மீளுருவாக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதனடிப்படையில் விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாகவும் தீவிரவாத விசாரணைப் பிரிவின் கருத்துக்கள் அமைந்திருந்தது.
காத்தான்குடி பதற்றம்
இந்நிலையில் கைதான தரப்பினர் அனைவரும் காத்தான்குடி பிரதேசத்தில் வர்த்தக துறை சார்ந்தவர்கள் எனவும், கடந்த காலங்களில் இவர்களின் செயற்பாடானது சந்தேகத்திற்கிடமாக இருந்ததாகவும் காத்தான்குடியில் இருக்கும் ஒருசிலரின் கருத்துக்கள் அமையப்பெற்றிருந்தன.
எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பாதிப்புகளானது இன்றுவரை இலங்கையர்கள் மத்தியிலும் மனதிலும் இருந்து நீங்காத நிலையில், காத்தான்குடி பதற்றமானது ஒரு மக்கள் மத்தியில் சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது…
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 8 மணி நேரம் முன்

ஏர் இந்திய விமான விபத்து எங்கள் செயல் - காதலனை பழி வாங்க போலி மிரட்டல் விடுத்த சென்னை பெண் News Lankasri

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri
