தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னாள் போராளி ஒருவரை கொலை செய்ய முயற்சித்த சுரேஷ் சலே! ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வெளிவரும் பயங்கர தகவல்கள்..
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் துள்ளியமாக தகவல் வழங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்று சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் இலங்கைக்கு வந்தவர்.
இவரை கொலை செய்ய கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் சுரேஷ் சலே முயற்சித்துள்ளதாக மயிர்க் கூச்செறியும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இவர் தொடர்பில் முழுமையான செய்தியொன்று எமது தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இவர் இந்திய 'Q' பொலிஸ் பிரிவு பிரதானி ஈஸ்வரமூர்த்தியுடன் இருந்த நெருங்கிய தொடர்பில் பல புலனாய்வுத் தகவல்களை இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவுக்கு வழங்கியவர்.
குறிப்பாக உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் இவர் வழங்கிய தகவல்களை நடைமுறைப்படுத்தியிருந்தால் நிச்சியமாக தாக்குதலை நிறுத்தியிருக்கலாம்.
தகவல் வழங்கிய முன்னாள் போராளி
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் வழக்கு விசாரணையில் இவர் தொடர்பில் இராணுவ புலனாய்வு அதிகாரிகள் பல தகவல்களை தெரிவித்திருந்தனர்.
அவ்வாறான நிலையில் கடற் புலிகளின் முன்னாள் போராளியான தம்பியன் என்ற பெயரை உடைய இவரும் வழக்கு விசாரணைகளில் சாட்சியமளித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் கடந்த காலத்தில் முறைப்பாடு செய்தவர்களை தாக்கவும், அவர்களுக்கு சேறு பூசவும் முயன்றார்கள் என்பதை நாம் அறிவோம்.
உண்மைகளை வெளிப்படுத்திய ஊடகவியலாளர்கள்- புலனாய்வாளர்களுக்கு சேறு பூச முயன்றார்கள். நீதிமன்றத்திற்கு வந்து முறைப்பாட்டை செய்தவர்களை பல்வேறு வழிகளில் நிறுத்த முயன்றார்கள்.
இதன் அடுத்த கட்டமாக கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றபோது சுரேஷ் சலே துள்ளியமாக தகவல்களை வழங்கிய தம்பியனை (முன்னாள் கடற்படை போராளி) பேச்சுவார்த்தை செய்ய வருமாறு அழைத்துள்ளார்.

ஆனால் அவர் போகவில்லை. அன்று தம்பியன் போயிருந்தால் இன்று இந்த விசாரணைகள் நடந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை தற்போது நடத்தி வரும் விசாரணைகள் மிகவும் முக்கியமானவை.
ஏனெனில் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்ட பல குற்றங்கள் இதற்குப் பின்னால் உள்ளன. ஒரே கும்பலின் சதித்திட்டம் இதற்குப் பின்னால் உள்ளது.
எனவே, ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்ட இந்தக் குற்றங்கள் இந்த நேரத்தில் வெளிவரவில்லை என்றால், இந்த நேரத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், இனி ஒருபோதும் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாமல் போய்விடும்.
இந்த விசாரணைகளை மேலும் விரைவுபடுத்த தேவையான வசதிகளை அரசாங்கம் வழங்க வேண்டும். புலனாய்வாளர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும்.