இராணுவத்தினருக்கு சஹ்ரான் குடும்பத்தை கைது செய்ய வாய்ப்பிருந்தும் தவறவிட்டது ஏன்..!
ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்சவும் இருந்தனர். எனினும், குற்றவாளிகளைத் தப்பிக்க வைத்ததாக அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நல்லாட்சி அரசாங்கத்தின் போது முக்கிய பொறுப்பில் இருந்த சுரேஷ் சலே, யாருடைய பணிப்புரைக்கமைய இவ்வளவு குற்றங்களைச் செய்தார் என்ற சந்தேகம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற சில மணி நேரங்களில் சஹ்ரான் குடும்பத்தினர் அவரது வீட்டில் இருந்ததாகவும், குற்றப்புலனாய்வு அதிகாரிகள் நினைத்திருந்தால் அவர்களைக் கைது செய்திருக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அப்போது ஆட்சியில் இருந்தவர்கள் அவர்களைத் தப்பிக்க வைப்பதற்காகவே பொறுமையாக இருந்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சஹ்ரானின் மனைவி சம்பவத்திற்குப் பின்னரும் உயிருடன் இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 22ஆம் திகதி தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், 100 நாட்களைக் கடந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சுரேஷ் சலே இந்த விடயங்கள் தொடர்பில் வாய் திறப்பாரா என குற்றப்புலனாய்வு அதிகாரிகள் காத்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான கடந்தகால அரசாங்கங்களால் மூடி மறைக்கப்பட்டதாகக் கூறப்படும் பல விடயங்களை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகின்றது News Inside நிகழ்ச்சி.