ஷானி அபேசேகரவின் மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம்
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த மனுவை ஒக்டோபர் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் இன்று (20.03.2025) உத்தரவிட்டது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியது தொடர்பான விசாரணை தொடர்பாக அவர் கைது செய்யப்படுவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி குற்றப் புலனாய்வுத் துறையால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்மானம்
இந்த மனு, ஜனக டி சில்வா, பிரியந்த பெர்னாண்டோ மற்றும் சம்பத் அபேகோன் ஆகிய நீதியரசர்கள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனுவின் உண்மைகளை கண்டறிய ஒக்டோபர் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அமர்வு உத்தரவிட்டது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் விவகாரத்தில் தன்னைக் கைது செய்யும் திட்டம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள மனுதாரர், குற்றப் புலனாய்வுத் துறை எந்த நியாயமான காரணமும் இல்லாமல் தன்னைத் தீங்கிழைக்கும் வகையில் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு மீதான மேலதிக விசாரணைகளை ஒக்டோபர் 16 ஆம் திகதி மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
மேலும் மனுதாரரும் பிரதிவாதிகளும் அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாகவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிரு்நத நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
