துருக்கியில் நில நடுக்கம்: சந்தர்ப்பத்தை பயன்படுத்திய ஐ.எஸ் பயங்கரவாதிகள் - உலக செய்திகளின் தொகுப்பு
துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து மூன்றுமுறை ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன், பலர் கடும் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
பல கட்டிடங்கள், வீடுகள் தரைமட்டமாகியுள்ளதுடன், மீண்டும் நில நடுக்கம் ஏற்படலாம் என அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
குறித்த சூழ்நிலையை சிரியா சிறையில் இருந்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளனர்.
துருக்கிய எல்லையில் உள்ள ரஜோ நகர சிறையில் 1300 ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் உட்பட 2000 பேர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான முழுமையான செய்துகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,