டிஜிட்டல் முறை அடையாள அட்டை - இலங்கையில் வரவுள்ள புதிய நடைமுறை
இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள திட்டத்தை ஏப்ரல் மாத நடுப்பகுதியில் தொடங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய முதல் டிஜிட்டல் அடையாள அட்டை 2026ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது செலவை குறைப்பதோடு நவீன தொழிநுட்ப வசதிகளையும் வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது.
மக்கள் தங்களது டிஜிட்டல் அடையாள அட்டையை 'e-Locker' என்ற செயலி மூலம் அணுகலாம். இது QR குறியீடு மற்றும் முக அங்கீகார வசதிகளைக் கொண்டிருக்கும்.
பல வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கான பணம்: இலங்கைக்கு வந்துள்ள பெருமளவு தங்க பிஸ்கட் - அம்பலமான விடயம்
டிஜிட்டல் முறை அடையாள அட்டை
டிஜிட்டல் முறையில் பயன்படுத்த விரும்பாதவர்களுக்கு அச்சிடப்பட்ட அட்டைகளும் வழங்கப்படும். புதிய டிஜிட்டல் அடையாள அட்டை வந்த பிறகும், தற்போதுள்ள பழைய தேசிய அடையாள அட்டைகள் அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

மக்கள் உடனடியாக மாற்ற வேண்டிய அவசியமில்லை. இதற்கான மென்பொருள் தளம் தயாரானதும், மாகாண சபைகள் மற்றும் பிரதேச செயலகங்கள் மூலம் தரவு சேகரிப்பு பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam