வவுனியா - மதவாச்சியில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது (Photos)
வவுனியா - மதவாச்சியில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மதவாச்சியில் விஷேட அதிரடி படையினர் நேற்றுமுன்தினம் (12.01.203) பிற்பகல் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது மதவாச்சி பகுதியில் 100 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
கைது செய்யப்பட்ட இருவரும் போதை மாத்திரைகளுடன் மதவாச்சி பொலிஸ் நிலையத்தில்
ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.