ஹெரோயினுடன் இளைஞரொருவர் கைது
திருகோணமலை - மஹதிவுல்வெவ பிரதேசத்தில் ஹெரோயினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இளைஞர் ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரவெவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதீப் குமார் தலைமையிலான குழுவினர் குறித்த இளைஞரை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹதிவுல்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபருக்கு எதிராக ஏற்கனவே கஞ்சா போதைப்பொருள் தொடர்பில் திருகோணமலை நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.