போதைப்பொருள் கடத்தல்! பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட ஒன்பது பேர் கைது
காலி, ஹக்மன, தெனகம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட ஒன்பது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கடத்தலின் போது 6 கிராம் மற்றும் 470 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
இரகசிய தகவல்
முன்னதாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணைகளின் போது அவர் வெளியிட்ட தகவலின் பேரில், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் வீடு சோதனையிடப்பட்டது.
இதன்போது 15 ஹெரோயின் பொதிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் 18 மற்றும் 38 வயதுடைய தெனகம, ஹக்மன, கதிர்காமம் மற்றும் திஸ்ஸமஹாராம பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா





மகேஷுக்கு விபத்து.. ஆனந்தி பற்றிய உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே சீரியல் அடுத்த வார ப்ரோமோ Cineulagam

ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri
