கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுற்றிவளைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்
மலேசியாவிலிருந்து வருகை தந்த இலங்கையர் ஒருவர் 10 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் இலங்கை மதிப்பு 250 மில்லியன் ரூபா என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து MH 179 என்ற விமானத்தில் இரவு 11.30 மணியளவில் வருகைத்தந்த பயணி ஒருவரின் பயணப் பொதியில் இருந்தே குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சுங்க அதிகாரிகள்
தேநீர் பொதியை போல இவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் தெமட்டகொட பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடையவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
போதைப்பொருளுடன் மேலதிக விசாரணைக்காக சந்தெகநபர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
