கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுற்றிவளைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்
மலேசியாவிலிருந்து வருகை தந்த இலங்கையர் ஒருவர் 10 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் இலங்கை மதிப்பு 250 மில்லியன் ரூபா என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து MH 179 என்ற விமானத்தில் இரவு 11.30 மணியளவில் வருகைத்தந்த பயணி ஒருவரின் பயணப் பொதியில் இருந்தே குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சுங்க அதிகாரிகள்
தேநீர் பொதியை போல இவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் தெமட்டகொட பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடையவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
போதைப்பொருளுடன் மேலதிக விசாரணைக்காக சந்தெகநபர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam
