ஜனாதிபதி தேர்தலில் அநுரவை மிரட்டிய கும்பல் - வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மக்களை அச்சுறுத்தும் வகையில் பிரசாரங்களை முன்னெடுத்த குழுவினர் தற்போது மிகவும் அமைதியாகி விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களில், ராஜபக்ச குடும்பத்தை போன்று, , ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறிப்பாக வெளிநாட்டு பிரசார நிறுவனங்களுடன் நேரடி தொடர்பு வைத்திருந்தவர்கள் மௌனமாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தோற்கடிக்கப்பட்ட குழு
அரசியல் ரீதியாக தோற்கடிக்கப்பட்ட மற்றுமொரு பிரச்சாரக்குழுவினர் வருமானம் இன்றி நிர்க்கதியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தல் முடிந்தவுடன் பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பானது இந்த தரப்புக்கு மேலும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலா
ஜனாதிபதி தேர்தல் முடிவுகளில் இருந்து சுதாகரிப்பதற்குள் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலும் தோல்வி ஏற்படவுள்ளதாக அவர்களே உறுதி செய்துள்ளனர்.

இதன் காரணமாக பலர் தேர்தல் செயற்பாடுகளில் இருந்து விலகியுள்ளதுடன், சிலர் வெளிநாட்டு சுற்றுலாவுக்கு சென்று மன அமைதி பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri