நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட போதைப்பொருள் வர்த்தகர் கைது!
நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் களுத்துறையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை வடக்கு பொன்சேகா பிளேஸ் இல் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திறந்த பிடியாணை
கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்து 110 கிராம் 17 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் 101 கிராம் ஐஸ் போதைப் பொருள், போதைப் பொருள் வர்த்தகத்தில் உழைத்ததாக சந்தேகிக்கப்படும் 75 ஆயிரம் ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபருக்கு களுத்துறை மேல் நீதிமன்றம் மற்றும் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
