நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட போதைப்பொருள் வர்த்தகர் கைது!
நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் களுத்துறையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை வடக்கு பொன்சேகா பிளேஸ் இல் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வரலாற்று சிறப்பு மிக்க களுதாவளை பிள்ளையாருக்கு எதிராக நடந்த பெரும் சதியில் சிக்கிய முக்கிய புள்ளிகள்!
திறந்த பிடியாணை
கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்து 110 கிராம் 17 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் 101 கிராம் ஐஸ் போதைப் பொருள், போதைப் பொருள் வர்த்தகத்தில் உழைத்ததாக சந்தேகிக்கப்படும் 75 ஆயிரம் ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபருக்கு களுத்துறை மேல் நீதிமன்றம் மற்றும் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri