ட்ரம்ப் - ஜீ ஜின்பிங் சந்திப்பு: ஈரான் போர் விவகாரத்தில் வெடிக்கப்போகும் காரசார விவாதங்கள்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங் ஆகியோர் மே 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் பீஜிங்கில் சந்திக்க உள்ளனர்.
தற்போது மத்திய கிழக்கில் நிலவும் ஈரான் போர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு உலக அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா விதித்துள்ள தடை
இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்படவுள்ள முக்கிய விவகாரங்கள் பின்வருமாறு:
ஈரான் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை ஈரான் உடனான போரை முடிவுக்குக் கொண்டு வர சீனா உதவ வேண்டும் என்றும், ஹோர்முஸ் நீரிணையில் சர்வதேச கப்பல் போக்குவரத்தைத் திறக்க ஒத்துழைக்க வேண்டும் என்றும் அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டும் வேளையில், ஈரானின் அமைதி வழி அணுசக்தி பயன்பாட்டிற்குச் சீனா ஆதரவு தெரிவிப்பது இரு நாடுகளுக்கும் இடையே மோதலை உருவாக்கியுள்ளது.
எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் சீனாவின் மசகு எண்ணெய் இறக்குமதியில் சுமார் 50 சதவீதம் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வருகிறது.
ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா விதித்துள்ள தடையால் சீனாவின் எண்ணெய் இறக்குமதி கடந்த ஏப்ரல் மாதத்தில் 20 சதவீதம் சரிந்துள்ளது.
இது சீனாவின் உள்நாட்டுச் சந்தையைப் பாதித்துள்ளதால், அமெரிக்காவின் இந்தத் தடையைச் சீனா கடுமையாக எதிர்த்து வருகிறது.
அமெரிக்கப் பொருளாதாரத் தடை
அமெரிக்கப் பொருளாதாரத் தடைகள் ஈரானிடம் இருந்து அதிக அளவில் மசகு எண்ணெய் வாங்கும் நாடாகச் சீனா திகழ்கிறது.
ஈரானிடம் எண்ணெய் வாங்கும் சீன நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் மீது அமெரிக்கா அண்மையில் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

இதற்குப் பதிலடியாக, அமெரிக்காவின் தடைகளைச் சீன நிறுவனங்கள் மதிக்கத் தேவையில்லை எனச் சீனா தனது சட்டத்தைப் பயன்படுத்தி உத்தரவிட்டுள்ளது.
இது தவிர, ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கியதாகக் குற்றம் சாட்டி சில சீன நிறுவனங்கள் மீது ட்ரம்ப் நிர்வாகம் அண்மையில் தடை விதித்துள்ளதும் இந்தப் பேச்சுவார்த்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்தச் சந்திப்பின் மூலம் போர் பதற்றம் குறையுமா அல்லது இரு வல்லரசு நாடுகளுக்கு இடையிலான மோதல் அதிகரிக்குமா என்பதை உலகம் உற்று நோக்கி வருகிறது.